
தமிழக முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி (58) மாரடைப்பால் சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார். இவர் தமிழக சட்டமன்ற உறுப்பினராக 6முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
திமுக ஆட்சியில் 1996-2001 இல் துணை சபா நாயகராகவும், 2006-2011 இல் விளம்பர துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
1989-2011 வரை தொடர்ந்து 28 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் பரிதி இளம்வழுதி. 2013இல் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அதன்பின், அதிமுகவில் பிளவு ஏற்பட்ட பொழுது, ஓ.பன்னீர் செல்வமுடன் இணைந்தார்.
தற்போது பரிதி இளம்வழுதியின் உடல் சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.