கண்ணன் சொன்ன வார்த்தையால் அவரை ஓங்கி அடைந்துளளார் ஐஸ்வர்யா.
Pandian Stores Update 16.08.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். வீட்டை விட்டு ஓடி சென்று திருமணம் செய்துகொண்ட கண்ணன் ஐஸ்வர்யாவை இரண்டு வீட்டாரும் சேர்த்துக் கொள்ளாமல் வெளியே அனுப்பி விட்டனர். நண்பன் வீட்டில் அடைக்கலமாக இந்த இருந்த இவரை கண்ணனின் நண்பனின் அம்மா திட்டித் தீர்த்து வெளியே அனுப்பிவிட்டார்.
சொத்தில் தனக்கும் பங்கு இருக்கு தன்னுடைய பாட்டி வீட்டிற்குச் சென்று விடலாம் என ஐஸ்வர்யா கண்ணனை கூட்டிக்கொண்டு பாட்டி வீட்டிற்கு அங்கு இவர்களுக்கு பிரசாந்த்தால் பிரச்சனை காத்துக்கொண்டிருக்கிறது. சொத்தில் பங்கு கேட்டு வந்துட்டியா போடி என கஸ்தூரி ஐஸ்வர்யாவை தள்ளி விடுகிறார்.
இதனால் எங்கே செல்வது என தெரியாமல் ஒரு கோவிலில் வெளியே இருவரும் அமர்ந்து கொண்டு இருக்கும்போது கதிரும் மூர்த்தியும் பைக்கில் வருகின்றனர். கண்ணன் ஐஸ்வர்யாவை பார்த்ததும் கதிர் வண்டியை நிறுத்த மூர்த்தி வண்டியை எடுடா என கோபப்படுகிறார்.
வீட்டிற்கு வந்து முல்லை மற்றும் மீனாவிடம் நடந்ததைக் கூறி வருத்தப்படுகிறார். எனக்கு இப்போ அண்ணன் தான் முக்கியம் என கூறுகிறார் கதிர்.
மூர்த்தியின் அம்மா யாரிடமும் பேசாமல் அழுதபடி இருக்கிறார். அனைவரும் ஒன்று சேர்ந்து பேசுங்க அம்மா என்னம்மா ஆச்சு உங்களுக்கு இப்படி இருந்தா எப்படி என கேட்டுக்கொண்டே இருக்கின்றனர். ஆனால் அதற்கும் பதில் சொல்லாமல் அமைதியாகவே அழுது கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.