கண்ணன் செய்த உதவி பற்றி பேசியுள்ளார் தனம். அதற்கு மூர்த்தியின் ரியாக்ஷன் என்னவாக இருந்தது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க.
Pandian Stores Serial Episode Update 18.10.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் தனம் அழகிய ஆண் குழந்தை பெற்றெடுத்துள்ளார். நர்ஸ் குழந்தையும் அம்மாவும் நலமுடன் இருப்பதாக கூறியதை தொடர்ந்து வீட்டில் உள்ள அனைவரும் மூர்த்திக்கு வாழ்த்துக்களை கூறினார். அதன் பிறகு அனைவரும் குழந்தையை பார்க்க உள்ளே சென்றனர்.
சபரிமலை வருவதை பக்தர்கள் தவிர்க்கவும் : தேவஸ்தானம் வேண்டுகோள்
கண்ணனும் ஐஸ்வர்யாவும் உள்ளே செல்லாமல் வெளியேவே நின்றனர். கண்ணன் நம்ம வீட்டுக்கு கிளம்பலாம் என ஐஸ்வர்யாவிடம் கூற குழந்தையை பார்க்க வேண்டாமா?? என கேட்க அண்ணிக்கு நல்லபடியா குழந்தை பிறந்துடுச்சு அதுவே போதும் என கிளம்புகின்றனர். கதிர் வெளியே வந்து பார்க்க இருவரும் வீட்டிற்கு கிளம்பி விட்டனர்.
அதன்பிறகு அனைவரும் குழந்தையை தூக்கி கொஞ்சுகின்றனர். மூர்த்தி அம்மா இல்லாமல் போய்ட்டாங்களே என வருத்தப்படுகிறார். பிறகு முல்லை ஜகாவுக்கு தகவல் சொல்ல கஸ்தூரியுடன் வந்து குழந்தையை பார்க்கிறார். பொண்ணு பெத்து கொடுக்காமல் என்னை ஏமாத்திட்டியே தனம் என கூறுகிறார் கஸ்தூரி.
தமிழ் கூட பேச தெரியாது Jacqueline கூட நடிக்குறாரு – மேடையில் கலாய்த்த Bala! | | Kannamma Eannamma
அதன் பிறகு தனம் சாகுற மாதிரி ஒரு வலி வந்துச்சு. அம்மா பக்கத்துல யாரையாச்சும் கூப்பிட போனாங்க கண்ணன் தான் விசியம் கேட்டு ஓடி வந்து ஆட்டோ பிடிச்சு வந்து என்னை அப்படியே தூக்கி என் கையை பிடிச்சிகிட்டே ஹாஸ்பிடலுக்கு கொண்டு வந்து சேர்த்தான். அவன் இதுக்காக தான் எதிர் வீட்டுக்கு குடி வந்தான் போல என தனம் கூறுகிறார். மூர்த்தி இதற்கு பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாகவே இருக்கிறார்.
ஜீவா அண்ணிக்கு குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் ஹாஸ்பிடலில் அனைவருக்கும் ஸ்வீட் வாங்கி கொடுக்கிறார். மறுநாள் தனம் டிஸ்சார் வீட்டுக்கு செல்கிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் எபிசோட்.