கண்ணனுக்கு கதிர் உதவிய நிலையில் மீனாவிடம் உண்மையை சொல்ல முற்பட்டுள்ளார் ஐஸ்வர்யா.
Pandian Stores Episode Update 11.11.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் கண்ணன் மீது திருட்டு பழி சுமத்தப் பட்ட நிலையில் இருப்பது தெரிந்தால் என்ன ஆகும் என பயந்து கொண்டு நடு வழியிலேயே நின்று கொண்டு இருக்கின்றார் கண்ணனும் ஐஸ்வர்யாவும். அந்த வழியாக வந்த கதிர் வீட்டுக்கு போங்க என சொல்லியும் இருவரும் கேட்கவில்லை. சூப்பர் மார்க்கெட்டுக்குப் போய் சண்டை போடலாம் என சொல்லியும் கண்ணன் அதற்கும் ஒப்புக்கொள்ளவில்லை. கடைசியில் கண்ணனை இந்தப் பிரச்சினையிலிருந்து காப்பாற்ற கதிர் மேஸ்திரிக்கு கொடுக்க வைத்திருந்த 20 ஆயிரம் பணத்தில் 15 ஆயிரத்தை எடுத்து கண்ணனிடம் கொடுத்து விடுகிறார்.
கேப்டன் பதவிக்கு, ரோகித் பொருத்தமானவரா? : கவாஸ்கர் பதில்
கண்ணன் வேண்டாம் எனக் கூறியும் கொண்டு போய் கொடு என கூறுகிறார். பிறகு கண்ணனும் ஐஸ்வர்யாவும் நேராக கடைக்குச் சென்று பணத்தை கொடுக்கின்றனர். இப்போ நீங்கதான் திருடனீங்கனு உறுதியாகி விட்டது என மீனாவின் அப்பா சொல்ல ஐஸ்வர்யா நாங்க திருடல. இது உங்க பணம் இல்லை என கூறுகிறார். கண்ணன் சத்தியமா நான் திருடல, இது காணாமல் போன அந்த பணம் கிடையாது என சொல்கிறார். திருடன் கழுதைகளுக்கு பேச்சை பார்த்தியா என மீனாவின் அப்பா ஆவேசமாகப் பேச சொந்தக்காரர்னு தான் நாங்களும் அமைதியா இருக்கும். நான் போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் கம்ப்ளைன்ட் குடுக்கலான்னு சொன்னேன்.
இப்பகூட போய்க் கொடுங்க நாங்க திருடாதே பணத்தை வாங்கிட்டாருனு போய் கம்ப்ளைன்ட் கொடு. போலீஸ் விசாரணை நடத்தி கண்டுபிடிக்கப்படும் என கூறுகிறார் மீனாவின் அப்பா. நான் அப்பவே அதை தான் சொன்னேன் கண்ணன்தான் வேணாம்னு சொல்லிட்டான் என ஐஸ்வர்யா சொல்ல உங்க ரெண்டு பேருக்கும் இனி இந்த கடையில வேலை இல்லை என கூறுகிறார் மீனாவின் அப்பா. உங்க கடைக்கு வேலைக்கு வந்ததே தப்பு என சொல்கிறார் ஐஸ்வர்யா. பின்னர் இருவரும் அங்கிருந்து கிளம்பி விடுகின்றனர்.
வீட்டுக்கு லேட்டாக வந்த கதிரிடம் மூர்த்தி ஏன் லேட்டு என கேட்க நேரம் ஆகிடுச்சு என கூறுகிறார். பிறகு ஏதேதோ கதிர் உலற இவன் எதோ குழப்பத்துல இருக்கான் என சொல்கிறார் ஜீவா. பிறகு சாப்பிட முகம் கை கால்களை கழுவிட்டு வா என சொல்லிவிட்டு மூர்த்தி மேஸ்திரிக்கு பணம் கொடுத்தாச்சா எனக் கேட்கிறார். கதிரும் கொடுத்து விட்டதாக பொய் சொல்லி விடுகிறார்.
Simbu ரசிகர்களுக்கு அடுத்தடுத்து காத்திருக்கும் Massive update – கொண்டாட தயாராகுங்கள்!
பிறகு முல்லை கதிர் சோகமாக இருப்பதை பார்த்து என்ன ஏதென விசாரிக்க கதிர் நடந்ததை கூறுகிறார். ஏன் இப்படி பண்ணிட்டு இப்போ அந்த பணத்திற்கு என்ன பண்ண போறீங்க என கேட்கிறார் முல்லை, பாத்துக்கலாம் விடு என சொல்கிறார் கதிர். இந்த பக்கம் மீனா தெருவில் அமர்ந்து கொண்டு இருக்க உள்ளே இருந்து வெளியே வந்த ஐஸ்வர்யா பேச்சுக் கொடுக்க மீனாவும் பேசுகிறார். பிறகு கடைக்கு போலயா எனக் கேட்க ஐஸ்வரியா நடந்த பிரச்சனையை சொல்ல முயற்சி செய்யும்போது கண்ணன் தடுத்து விடுகிறான்.
பிறகு ஜீவா கூப்பிட மீனா உள்ளே வர கண்ணன் எதையும் சொல்லாத அதுவா தெரியும்போது தெரியட்டும் என கூறி விடுகிறார். கண்ணன் நடந்த பிரச்சினைகளை எண்ணி பயத்தில் இருக்க ஐஸ்வர்யா ஆறுதல் கூறுகிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாண்டியன் ஸ்டோர் சீரியல் எபிசோட்.