தயாரிப்பாளர் கூறிய குற்றச்சாட்டிற்கு நித்யா மேனன் பதிலடி கொடுக்கும் விதமாக விளக்கம் கொடுத்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகை தான் நித்யா மேனன். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் தனது அபாரமான நடிப்பை கொடுத்து பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார்.

தமிழில் இவரது நடிப்பில் வெளியான ஓ காதல் கண்மணி, காஞ்சனா 2, மெர்சல் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் சோபனா என்ற கேரக்டரில் நடித்துள்ள நித்தியா மேனனின் நடிப்பை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் மலையாள தயாரிப்பாளர் ஒருவர் நடிகை நித்யா மேனன் திமிர் பிடித்தவர், அவர் படங்களில் நடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து நித்யா மேனன் ” நான் மிகவும் திமிர் பிடித்தவள் என பலர் நினைக்கிறார்கள் ஆனால் அதில் உண்மை கிடையாது, சினிமா துறையில் எனக்கு நிறைய எதிரிகள் உள்ளனர். அவர்கள் விரும்பியபடி நான் செய்யாத போது எனக்கு எதிரான பொய்களை பரப்பி வருகிறார்கள் என விளக்கம் அளித்துள்ளார். இவரது இந்த விளக்கம் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.