சிவகார்த்திகேயன் பிரின்ஸ் திரைப்படம் குறித்து வெளியான புதிய தகவலால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது மனதையும் கவர்ந்து தற்போது டாப் ஹீரோவாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் டான் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குனரான அனுதீப் இயக்கத்தில் உருவாகியுள்ள பிரின்ஸ் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழ்,தெலுங்கு என இரு மொழியிலும் உருவாகியுள்ள இப்படத்தில் உக்ரைன் நடிகை மரியா ரியாபோஷப்கா கதாநாயகியாக நடிக்க முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடித்துள்ளார். தமன் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலான பிம்பிலிக்கி பிளாப்பி பாடல் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வேற லெவல் ஹிட் அடித்து ரசிகர்களை கவர்ந்ததை தொடர்ந்து இப்படத்தின் தமிழ் வசனங்களை எழுத தமிழ் திரைப்பட இயக்குனர் ஒருவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது விஜய் ஆண்டனி நடித்த ’இந்தியா பாகிஸ்தான்’ என்ற படத்தை இயக்கிய ஆனந்த் என்பவர் தான் ‘பிரின்ஸ்’ படத்தின் தமிழ் வசனங்களை எழுதி உள்ளார் என்பது தற்போது தெரியவந்துள்ளது. இவர் இயக்கத்தில் வெளியான இந்தியா பாகிஸ்தான் திரைப்படம் ஆரம்பம் முதல் முடிவு வரை காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் இருந்ததால் அதேபோல் ‘பிரின்ஸ்’ திரைப்படத்திலும் காமெடிகள் அதிகம் நிறைந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.