இ-பாஸ் முறையில் செய்யப்படும் அதிரடி மாற்றங்கள் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
New Rules on E-Pass in Tamilnadu : இந்தியாவில் கொரானா வைரஸ் அதி தீவிரமாக பரவி வருகிறது. இருப்பினும் இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் தொடர்ந்து தலைவர்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் தமிழகத்தில் மட்டும் கொரானா வைரஸ் பரவல் மேலும் அதிகமாகாமல் இருக்க மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு இ-பாஸ் முறை அமலில் இருந்து வருகிறது.
ஆனால் விண்ணப்பிப்பவர்கள் அனைவருக்கும் இ-பாஸ் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில்தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ள அதிரடி மாற்றங்கள் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
கோவில்களுக்கும், மாணவர்களுக்கும் அதிரடி திட்டங்களை அறிவித்த தமிழக முதல்வர்
அதாவது இன்று முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல ஆதார் கார்டு அல்லது ரேஷன் கார்டு மற்றும் தொலைபேசி எண்ணுடன் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ பாஸ் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
மேலும் வெளிநாடுகளில், வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு பழைய இ பாஸ் முறையே தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இன்று முதல் இ பாஸ் பெறுவது என்பது மிகவும் எளிதான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.