நெல்சன் திலிப் குமார் அஜித்தை இயக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் திலீப் குமார். இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கி வெற்றி கண்டார்.
பிறகு தளபதி விஜயை வைத்து பீஸ்ட் படத்தை இயக்க அது பெரிய அளவில் வரவேற்பு இல்லாமல் தோல்வியை தழுவியது. இதைத் தொடர்ந்து நெல்சன் இயக்கிய திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றுள்ளதால் ரஜினி மற்றும் நெல்சனுக்கு நல்ல கம் பேக் படமாக அமைந்துள்ளது.
இப்படியான நிலையில் நெல்சன் அடுத்ததாக அஜித்தை வைத்து படம் இயக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. விடாமுயற்சி படத்தை முடித்த பிறகு அஜித் நெல்சன் இயக்கத்தில் நடிப்பார் என சொல்லப்படுகிறது. மேலும் இந்த படம் சன் டிவி வானத்தை தயார் பண்ணி விடுவார்கள் எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.