மகன்களுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடிய நயன்-விக்கி தம்பதியரின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படும் இவர் கடந்த 2022ஆம் ஆண்டு தன்னுடைய நீண்ட நாள் காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு வாடகை தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்த அவர் பல சர்ச்சைகளை எதிர்கொண்டு சட்டரீதியாக அதனை முறியடித்தனர்.

அதன் பிறகு தனது மகன்களுடன் அவ்வப்போது எடுக்கப்படும் புகைப்படங்களை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார். அந்த வகையில் தங்களது மகன்களுடன் முதல் ஓணம் பண்டிகையை கொண்டாடுவதாக குறிப்பிட்டு புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அப்புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் நன்றாக வளர்ந்து இருக்கும் நயன்தாராவின் மகன்களை பார்த்து ஆச்சரியம் அடைந்து கமெண்ட்களை குவித்து வருகின்றனர்.