கோவிலில் நயன்தாரா செருப்பணிந்து வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் நேற்று முன்தினம் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். 7 வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.

திருமணம் முடிந்த நிலையில் நேற்று இருவரும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். கோவில் வளாகத்தில் விக்னேஷ் சிவன் வெறும் காலில் நடக்க நயன்தாரா செருப்பு காலுடன் நடந்து வந்திருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோவிலுக்குள் இப்படியா செருப்பணிந்து நடப்பீங்க என கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் நடிகை நயன்தாரா இந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். காலில் செருப்பணிந்து இருந்த உணர்வு இல்லாமல் நடந்து சென்று விட்டேன் என தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.