Nalini Latest News : Political News, Tamil nadu, Politics, BJP, DMK, ADMK, Latest Political News, Seeman, Gangress, Extend parole Chennai High Court

Nalini Latest News :

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் நளினி தனது பரோலை மேலும் நீட்டிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் சிறையிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் சிறையிலும் கடந்த 28 ஆண்டுகளாக தண்டனை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இவர்களுடைய மகளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, 6 மாதம் பரோல் கேட்டு நளினி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கியது.

ஜூலை மாதம் 25- ஆம் தேதி பரோலில் வெளியே வந்த நளினி, சத்துவாச்சாரியில் தங்கி தினமும் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது பரோலில் வெளியே வந்த நளினி, தனது பரோலை மேலும் அக்டோபர் 15-ம் தேதி வரை நீட்டிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ஏற்கனவே ஒருமுறை பரோல் நீட்டிப்பு பெற்ற நிலையில் மேலும் அவகாசம் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகளின் திருமணத்திற்கு பரோலில் வெளியே வந்த நளினி, தனது பரோலை மீண்டும் நீடிக்க கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதால் பரோல் கிடைக்குமா என்பது சந்தேகமே..

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.