கர்ப்பமானதால் சின்னத்திரைக்கு சீரியல் நடிகை கொஞ்ச நாளைக்கு டாட்டா சொல்லி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல்களில் ஒன்று யாரடி நீ மோகினி. இந்த சீரியலில் நாயகியாக நடித்தவர் நட்சத்திரா.
ஜீ தமிழ் தொலைக்காட்சி சீரியல் தொடர்ந்து இவர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வள்ளி திருமணம் என்ற சீரியலில் நடித்து வந்தார்.
தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த அனைத்து சீரியல்களும் முடித்து வைக்கப்பட்டு நான் பிக்சன் தொலைக்காட்சி சேனலாக மாற்றப்பட்டுள்ளது.
அதே நேரம் சமீபத்தில் திருமணம் ஆன நட்சத்திரா கர்ப்பமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் காரணமாக சில காலம் அவர் சின்னத்திரைக்கு டாட்டா சொல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் கர்ப்பமாக இருப்பது குறித்து நட்சத்திரா இதுவரை எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.