வடிவேலு நடிப்பில் வெளியாகியுள்ள நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் வடிவேலு. இவரது நடிப்பில் சுராஜ் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் நாய் சேகர் ரிட்டன்ஸ்.
சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படம் எப்படி இருக்கு என்பது குறித்த விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.
படத்தின் கதைக்களம் :
பணக்கார வீட்டு நாய்களைக் கடத்தி பணம் பறிக்கும் வேலையை செய்து வருகிறார் நாய் சேகர் வடிவேலு. அவர் ஒரு நாயை கடத்திக் கொண்டு வர அந்த நாயின் உரிமையாளர் திரும்பவும் நாயே கேட்க அதற்கு ஒரு தொகையை பேரம் பேசுகிறார். இன்னொரு பக்கம் சிறுவயதில் தான் தொலைத்த நாயை தேடுகிறார். அந்த நாய் யாரிடம் இருக்கிறது? வடிவேலுவிடம் கிடைத்ததா இல்லையா என்பது தான் இந்த படத்தின் கதை.
படத்தைப் பற்றிய அலசல் :
நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ள வடிவேலு நடிப்பில் அசத்தியுள்ளார். வடிவேலு, கிங்க்ஸ்லி, ஆனந்தராஜ் என அனைத்து நடிகர்களும் காமெடியில் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றனர்.
ஆனந்தராஜ் வரும் காட்சிகள் சிரிப்பலையில் அதிர வைக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசை மற்றும் பாடல்கள் கவனத்தை ஈர்க்கின்றன.
சுராஜ் காமெடி கலந்த திரைப்படமாக இந்த படத்தை கொண்டு சென்றிருந்தாலும் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம் என எண்ண தோன்றுகிறது.