நடிகர் விஜய் மீது போலீஸில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய திரை உலகில் முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வரும் தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வேற லெவலில் உருவாகி வரும் இப்படத்தில் இருந்து அனிருத் இசையமைப்பில் விஜய் பாடி உள்ள ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான நா ரெடியா பாடல் சில தினங்களுக்கு முன்பு விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது.

ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சமூக வலைத்தள பக்கங்களில் தற்போது வரை பட்டையை கிளம்பி வரும் அப்பாடல் குறித்து சில தரப்பிலிருந்து நெகட்டிவான கருத்துக்களும் வெளியாகி வருகிறது.

அந்த வகையில் சென்னை கொருக்குப்பேட்டை சேர்ந்த சமூக ஆர்வலர் செல்வம் என்பவர் ஆன்லைன் மூலம் நடிகர் விஜய் மீது போதை பொருள் தடுப்பு சட்ட பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்திருக்கிறார். அதில், போதை பொருள் பழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும், ரவுடிசத்தை ஊக்குவிக்கும் வகையிலும் “நா ரெடிதான்” பாடல் இருப்பதாக தெரிவித்திருக்கிறார். இந்த தகவல் தற்போது இணையதளத்தில் வெளியாகி தீயாக பரவி வருகிறது.