Murugadoss Pray

A.R.Murugadoss Pray : சர்கார் படத்திற்கு இனியும் பிரச்சனை வர கூடாது என கோவில் கோவிலாக ஏறி வேண்டி வருகிறார் முருகதாஸ்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் முருகதாஸ். இவர் தற்போது தளபதி விஜயை வைத்து சர்கார் படத்தை இயக்கியுள்ளார்.

துப்பாக்கி, கத்தி படங்களை தொடர்ந்து தற்போது மூன்றாவது முறையாக சர்கார் கூட்டணி அமைந்துள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

சமீபத்தில் சர்கார் கதை என்னுடையது, செங்கோல் என்று நான் எழுதிய கதை என உதவி இயக்குனரான வருண் ராஜேந்தர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இறுதியில் முருகதாஸும் வருணும் சமரசமாக பேசி கொண்டு பிரச்சனையை முடித்து கொண்டனர்.

இதனையடுத்து மீண்டும் எந்த பிரச்னையும் வந்து விட கூடாது என்பதற்காக சர்கார் சக்ஸஸ் ஆக வேண்டும் என்பதற்காகவும் முருகதாஸ் காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் சென்று அம்மனை வழிபட்டுள்ளார்.

முருகதாஸ் கோவிலில் எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.