முதல் முறையாக தனது மகனின் போட்டோவை வெளியிட்டுள்ளார் மிர்ச்சி செந்தில்.
தமிழ் சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் மிர்ச்சி செந்தில். இதனை தொடர்ந்து நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற சீரியல் களில் நடித்து வந்த இவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா என்ற சீரியலில் நடிக்கிறார்.
ஸ்ரீஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் குழந்தை இல்லாமல் இருந்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் அழகிய ஆண் குழந்தை பிறந்தது.
இப்படியான நிலையில் தற்போது முதல் முறையாக தன்னுடைய மகனின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் செந்தில். போட்டோவை பார்த்து ரசிகர்கள் சோ க்யூட் என கமெண்ட் அடித்து வாழ்த்து கூறி வருகின்றனர்.