தன் மகனுடன் முதல் தீபாவளி கொண்டாடியுள்ளார் மிர்ச்சி செந்தில்.
தமிழ் சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் நாயகனாக நடித்து மக்களை கவர்ந்தவர் மிர்ச்சி செந்தில். இதனைத் தொடர்ந்து நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் நடித்து வந்த இவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா தொடரில் சண்முகமாக நடித்து வருகிறார்.
ஸ்ரீஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட செந்திலுக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் தற்போது தன்னுடைய மகன் பிறந்து முதல் தீபாவளியை கொண்டாடியுள்ளார் மிர்ச்சி செந்தில்.
இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.