மெர்சல் திரைப்படம் வெற்றியா? இல்லையா? என்பது பற்றி பிரபல தயாரிப்பாளர் ஒருவர் பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியான திரைப்படம் மெர்சல். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது.
ஆனால் இப்படத்திற்கு பிறகு அந்த நிறுவனம் வேறு எந்த படத்தையும் தயாரிக்கவில்லை. இதனால் மெர்சல் படத்தால் ஏற்பட்ட நஷ்டமே காரணம் என தகவல்கள் பரவி வந்தன.
இந்நிலையில் தற்போது பிரபல தயாரிப்பாளரான தனஞ்செயன் மெர்சல் நல்ல லாபம் கொடுத்த படம். இப்படத்திற்கு முன்னர் தேனாண்டாள் தயாரித்த படங்கள் சரியாக போகவில்லை. அவர்களால் தான் அடுத்த படத்தை உடனே தொடங்க முடியவில்லை என கூறியுள்ளார்.