சூர்யாவுக்கு என்ன கொம்பா முளைச்சிருக்கு எனவும் கோலிவுட்டின் மாபியாக்கள் மூன்று பேர்தான் எனவும் மீரா மிதுன் பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
Meera Mitun Blast Vijay and Suriya : சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் மீரா மிதுன். தன்னைத்தானே சூப்பர் மாடல் என சொல்லிக் கொள்கிறார்.
இவர் சமீப காலமாக தொடர்ச்சியாக விஜய், சூர்யா மற்றும் கமல் போன்ற பெரிய நடிகர்களை விமர்சனம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது பிரபல நியூஸ் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டி ஒன்றில் மீரா மிதுன் தமிழ் சினிமாவின் கோலிவுட் மாபியா சூர்யா, விஜய் மற்றும் கமல் குடும்பம் தான் என தெரிவித்துள்ளார்.
இவர்கள் நல்லவர்கள் போல வெளியில் வேஷம் போட்டுக்கொண்டு சினிமாவில் அறிமுக நடிகர்கள் யாரும் அறிமுகமாக கூடாது. வளரக்கூடாது என பெரிய திட்டத்தையே தீட்டி வருகின்றனர். இவர்களுக்கு பிறகு இவர்கள் வாரிசுகள் மட்டுமே தமிழ் சினிமாவை ஆள வேண்டும் என நினைக்கிறார்கள் எனப் பேசியுள்ளார்.
இதையெல்லாம் நான் தைரியமாக வெளியே சொல்லி வருவதால் என் கரியரை காலி பண்ண நினைக்கிறார்கள். சூர்யா, விஜய் போன்றவர்கள் வந்தால் அனைவரும் எழுந்து நின்று வணக்கம் சொல்ல வேண்டும் என்கிறார்கள்.
சூர்யாவுக்கு பக்கத்தில் கால் மேல் கால் வைத்து அமரக் கூடாது என்கிறார்கள். எல்லோரும் மனிதர்கள் தானே. சூர்யாவுக்கு என்ன கொம்பா முளைச்சிருக்கு என பேசியுள்ளார். சூர்யாவிற்கு நடிப்பே வராது அதை நான் பக்கத்துல இருந்து பார்த்து இருக்கேன் என கூறியுள்ளார்.
இவருடைய இந்த பேட்டி சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளதோடு விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.