கோப்ரா படத்தில் இடம்பெறும் கொடூரக் காட்சி ஒன்றில் உயிரை பணயம் வைத்து நடித்துள்ளார் சியான் விக்ரம்.
Massive Scene Details in Cobra : தமிழ் சினிமாவில் திறமையான முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். படத்துக்கு படம் திறமையான நடிப்பையும் தன்னுடைய உடல் அமைப்பையும் மாற்றிக் கொள்வதில் வல்லவர்.
இவரது நடிப்பில் இறுதியாக வெளியான கடாரம் கொண்டான் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது.
இந்த படத்தை தொடர்ந்து அவர் டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படத்தின் இயக்குனரான அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் கோப்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தில் கிட்டத்தட்ட 9 வேடங்களில் விக்ரம் நடித்துள்ளார். மேலும் படத்தில் விக்ரம் வாயில் துணி அடைத்துப் போட்டு கை கால்கள் கட்டப்பட்டு தண்ணீரில் தலைகீழாக தொங்கும் காட்சி ஒன்று இடம் பெற்றுள்ளதாம்.
இந்த ரிஸ்கான காட்சிக்கு போட்டுக் கொள்ளலாம் என படக்குழு கூறியபோது விக்ரம் வேண்டாம் நானே நடிக்கிறேன் என கூறியுள்ளார். இல்லை இந்த காட்சியை மாற்றி விடலாம் என அஜய் ஞானமுத்து கூறியும் விக்ரம் அடாவடியாக நடித்துள்ளார்.
இவ்வாறு நடித்ததால் விக்ரமின் மூக்கு, காது ஆகியவைகளில் தண்ணீர் புகுந்து கொண்டு நரம்பு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் மீண்டும் இடைவிடாமல் இந்த படத்தின் காட்சிகளை நடித்து கொடுத்துள்ளார் விக்ரம். ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படமாக கோப்ரா இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட 90% முடிவடைந்துள்ளன. விக்ரமின் பிறந்தநாள் அன்று படத்தின் டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக படத்தின் டிரைலரை வெளியிடவில்லை.
மாஸ்டர் இண்ட்ரோ இப்படித்தான் இருக்கும் – பிரபலம் வெளியிட்ட மாஸ் தகவல்.!
ரசிகர்கள் இந்த படத்தின் அப்டேட் கேட்டும் அஜய் ஞானமுத்து தற்போதைக்கு எதுவும் கூற முடியாது என அமைதி காத்து வருகிறார்.
கோப்ரா படத்தை மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.