விவாகரத்து பெற்று மகளுடன் தனியாக வாழ்ந்து வரும் மஞ்சு வாரியரின் கணவர் குறித்து தெரிய வந்துள்ளது.
மலையாள திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மஞ்சு வாரியர். இவர் தமிழில் தனுசுக்கு ஜோடியாக அசுரன் படத்தில் நடித்ததை தொடர்ந்து நடிகர் அஜித்துக்கு ஜோடியாக துணிவு படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதன் மூலம் தமிழ் சினிமாவிலும் முக்கிய நாயகியாக மஞ்சு வாரியர் இடம் பிடித்துள்ளார். மேலும் அவர் தமிழிலும் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தனிப்பட்ட வாழ்க்கையில் தனது கணவரை விவாகரத்து செய்து தனது மகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். இவருடைய முதல் கணவர் யார் என்பது தற்போது தெரியவந்துள்ளது. அவரும் நடிகர் தான், மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்த திலீப்குமார் தான்.
கடந்த 2015-ம் அண்டு நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்து மஞ்சு வாரியர் தன்னுடைய மகள் மீனாட்சி உடன் தனியாக வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.