மணிமேகலை மதம் மாறிவிட்டதாக விமர்சனம் செய்த ஒருவருக்கு அவர் பதில் கொடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மணிமேகலை.
இதனைத் தொடர்ந்து உசைன் என்பவரை காதல் திருமணம் செய்த பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது மட்டுமின்றி குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று வந்தார்.
இந்த நிலையில் அரசியல் பிரமுகர் ஒருவர் மணிமேகலை புர்கா அணிந்திருக்கும் படத்தைப் பகிர்ந்து, “எப்படி ஆரம்பிச்சது.. எப்படி முடிஞ்சிருக்கு பாத்தீங்களா.. லவ்_ஜிகாத். மதமென பிரிந்தது போதும்” என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவுக்கு மணிமேகலை தனது பதிலை பதிவு செய்துள்ளார். அதில் இப்படி வாழ்க்கை முழுவதும் உளறிக் கொண்டே இருப்பதற்கு, போய் உருப்படுகிற வேலையை பார்க்கலாம் இல்ல” என பதிலளித்துள்ளார் மணிமேகலை.