கைதி 2 உருவாவது உறுதி என லோகேஷ் கனகராஜ் ட்வீட் செய்துள்ளார்.
தமிழ் சினிமாவில் மாநகரம் படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்திழுத்தவர் லோகேஷ் கனகராஜ்.
இவர் தற்போது கார்த்தியை வைத்து கைதி என்ற படத்தை இயக்கியுள்ளார். தீபாவளிக்கு வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் இறுதியில் இரண்டாம் பாகம் வரும் என்பது போல லீட் கொடுத்திருந்தனர்.
தற்போது லோகேஷ் கனகராஜும் அதே தான் ட்வீட் ஒன்றிலும் கூறியுள்ளார். மீண்டும் கைதி 2 படத்திற்காக வாய்ப்பு கொடுத்த கார்த்தி மற்றும் தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபுவிற்கு அவர் நன்றி கூறியுள்ளார்.
கைதி 2 உருவானால் தளபதி 64 தள்ளி போகுமா? என்ற குழப்பம் விஜய் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தளபதி 64 படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருப்பதால் இந்த படத்திற்கு பிறகு தான் கைதி 2 தொடங்கும் என உறுதியாக நம்பலாம்.
Thanx for the overwhelming response guys,.. loved every minute in sets and the entire process of making kaithi…will cherish this forever! Thank you once again prabu sir and karthi sir for the opportunity!..To answer all your txts and calls yes“ Dilli will be back”???? pic.twitter.com/uZ6lWX24x3
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) October 26, 2019