அதிகாலை காட்சிக்கு அனுமதி கேட்டுச்சென்ற தயாரிப்பாளர் கார் விபத்தில் சிக்கி உள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உலகம் முழுவதும் அக்டோபர் 19ஆம் தேதி லியோ என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
இந்த படத்தின் அதிகாலை காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ள நிலையில் தயாரிப்பாளர் நீதிமன்றத்தை நாடினார். ஆனால் நீதிமன்றமும் நள்ளிரவு மற்றும் அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி கொடுக்க முடியாது என கை விரித்து விட்டது.
இதைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக தயாரிப்பாளர் வழக்கறிஞர்களுடன் தலைமைச் செயலகத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு உள்துறை செயலாளரை சந்தித்துவிட்டு திரும்பிய பிறகு, ஓட்டுநரை காரை எடுத்து வரச் சொல்லியபோது, அந்த கார் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் மீது மோதியுள்ளது.
தலைமைச் செயலக வளாகத்தில் நடந்த இந்த விபத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கார் பைக் மீதி ஏறி நிற்கும் புகைப்படமும் இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. லியோவுக்கு நேரமே சரியில்ல போலயே என நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.