லெஜெண்ட் சரவணன் அடுத்ததாக நடிக்க இருக்கும் படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக திகழ்பவர் லெஜெண்ட் சரவணன். லெஜெண்ட் சரவணா ஸ்டோரின் உரிமையாளரான இவர் விளம்பரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது மட்டுமின்றி கடந்த ஆண்டு வெளியான ‘தி லெஜன்ட்’ என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாகவும் பிரபலமானார். அவரது சொந்த தயாரிப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததை தொடர்ந்து சமீபத்தில் இப்படம் ஓடிடி தளத்திலும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

அதன் பிறகு லெஜண்ட் சரவணன் தனது இரண்டாவது படத்திற்கு தயாராகி வருவதாகவும் ஒரு சில முன்னணி இயக்குனர்களிடம் கதை கேட்டு வருவதாகவும் சில தகவல்கள் இணையத்தில் பரவலாக பேசப்பட்டதை தொடர்ந்து சமீபத்தில் வித்தியாசமான கெட்டப்புக்கு மாறிய லெஜண்ட் சரவணனின் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி அனைவரது கவனத்தையும் பெற்று வைரலானது.

இந்த நிலையில் லெஜெண்ட் சரவணன் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி தனது அடுத்த படத்தை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த லெஜென் சரவணன் அவர்கள் தற்போது ஒரு கதையை தேர்வு செய்து அதற்கு ஓகே சொல்லி விட்டதாகவும் அப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒரு முன்னணி நடிகை தேர்வாக இருப்பதாகவும் இப்படமும் அவரது முதல் படம் போல் பிரம்மாண்டமான செலவில் உருவாக்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இணையதளங்களில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.