லத்தி படத்தில் சண்டை காட்சியை படம் பிடிக்கும் போது நடிகர் விஷாலின் காலில் அடிபட்டுள்ளதால் படப்பிடிப்பு பாதியில் ரத்து செய்யப்பட்டது. இதனால் வருத்தம் அடைந்த ரசிகர்கள் இந்த தகவலை வைரலாக்கி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் பிரபல ஹீரோவாக வலம் வருபவர் தான் விஷால். இவர் தற்போது “லத்தி” என்னும் திரைப்படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இயக்குனர் வினோத்குமார் இயக்கி வரும் இப்படத்தில் கதாநாயகியாக சுனைனா நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக பிரபு அவர்கள் நடித்துள்ளார். இந்த படத்தை நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா இணைந்து ராணா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்து வருகின்றனர். 

 யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் தமிழ் ,தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் போன்ற அனைத்து மொழிகளிலும் ஒரே நேரத்தில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது. இப்படம் விஷால் நடிப்பில் வெளியாகும் முதல் பான் இந்தியா படம் என்பதால் இப்படத்தின் இறுதி கட்ட பணியில் விஷால் தீவிரமாக உடற்பயிற்சி செய்து வருகிறார்.

இதனை விஷால் அவரின் பேஸ்புக்கில் தனது புகைப்படத்துடன் இணைத்து தொடர்ந்து வொர்க் அவுட் செய்வதாகவும் ‘லத்தி’ படத்தின் இறுதிக்கட்ட சண்டைக் காட்சிகளுக்காக தயாராகி வருவதாகவும் பதிவிட்டிருந்தார். சமீபத்தில் விஷாலின் இந்த பதிவு ரசிகர்களின் இடையே வைரலாக பரவி வந்த நிலையில் தற்போது இப்படத்திற்கான இறுதி கட்ட சண்டைக் காட்சி பணி சென்னையில் நடைபெற்றது. அதில், கைதி ஒருவரை ஜீப்பில் ஏற்றி கொண்டு விஷால் செல்கிறார். அப்போது விஷாலை 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் கத்தி, கம்புகளுடன் ஜீப்பை தாக்குகின்றனர் அப்போது அவர்களுடன் விஷால் சண்டை போடுவது போல் அந்தக் காட்சி உருவாக்கப்பட்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக விஷாலின் காலில் பலத்த அடிபட்டதால் படப்பிடிப்பு பாதியில்  ரத்து செய்யப்பட்டது.

அதன் பிறகு விஷாலை பரிசோதித்த மருத்துவர்கள் காலில் எலும்பு முறிவு எதுவும் இல்லை என்றும், பிசியோ தரப்பி செய்தால் சரியாகி விடும் என்றும் கூறியுள்ளனர். இதனால் நாளை மீண்டும்   பரிசோதிக்கப்பட்டு வலி இல்லையென்றால் விஷால் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று படக்குழு தெரிவித்துள்ளது. விஷால் விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியாகிய நிலையில் வருத்தத்துடன் ரசிகர்கள் இதனை வைரலாக்கி வருகின்றனர்.