ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகவும் அதன் கதைக்களம் குறித்த தகவலும் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். யுவராஜ் நடிப்பில் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் வெளியாகும் 600 கோடி ரூபாய் வசூலை பெற்று மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ஜெயிலர்.
இந்த படத்தின் கிளைமாக்ஸில் ரஜினி தன்னுடைய மகனை கொன்றவர்களை பழிவாங்க ஆக்ரோஷமான கோபத்துடன் நடிப்பில் மிரட்டி இருப்பார் இந்த நிலையில் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகளை சன் பிக்சர்ஸ் தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இந்த இரண்டாம் பாகத்தின் கதை ரஜினிகாந்திற்கும் அவருடைய பேரனுக்கும் இடையேயான உறவை பேசும் கதையாக இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.