Kushboo's Police Complaint
Kushboo's Police Complaint

Kushboo‘s Police Complaint : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான குஷ்பு, பல ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து, ரசிகர்களால் கோவில் கட்டப்படும் அளவிற்கு அவர்களது மனதை கொள்ளை கொண்ட பெருமைக்குரியவர்.

இவர் கமல், ரஜினி, சத்யராஜ் போன்ற பல பிரபலங்களுக்கு கதாநாயகியாக நடித்துள்ளார். அதன்பின் இயக்குனர் சுந்தர்.சி-ஐ திருமணம் செய்துகொண்டு, அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது.

தற்சமயம் படவாய்ப்புகள் குறைந்துள்ளதால், முழுநேரமும் அரசியலில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார். தொடக்கத்தில் திமுகவில் இருந்து தற்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

இந்தச் சின்ன வயசிலேயே சூப்பர் சிங்கர் பூவையார் சேர்த்த சொத்துக்கள் – மொத்த மதிப்பு எவ்வளவு தெரியுமா? கேட்டா தலையே சுத்தும்.!

அண்மையில் இவர் பாஜகவிற்கு எதிராக கருத்து தெரிவித்ததால் பெரிதும் விமர்சிக்கப்பட்டார். இந்த நிலையில்தான் இவருக்கு ஒரு மர்ம நண்பரிடமிருந்து போன் கால் மூலம் கற்பழிப்பு மிரட்டல் வந்துள்ளது.

தனது ட்விட்டர் பக்கத்தில் ”அந்த நபர் நம்பரையும், அவர் கொல்கத்தாவிலிருந்து தான் போன் செய்துள்ளார் செய்துள்ளார்” எனக்கூறி கொல்கத்தா போலீசாரிடம் உதவி கேட்டுள்ளார்.

இந்த ட்விட்டர் பதிவினை கண்ட கொல்கத்தா போலீசார், முழு விவரங்களையும் மின்னஞ்சலில் அனுப்புமாறு கூறி மின்னஞ்சல் முகவரியும் கொடுத்துள்ளனர்.