Kerala CM Vijayan Slams H Raja – சென்னை: கேரள அரசு சபரிமலை கோவிலில், ஐயப்ப பக்தர்களாக இல்லாதவர்களை கோவிலுக்குள் அனுமதித்துள்ளதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியதில் இருந்து அங்கு தினம்தினம் பரபரப்பு நிலவி வருவது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா இதுகுறித்து பேசுகையில், சபரிமலை விவகாரத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது.
மேலும், ‘இந்து விரோத செயல்பாடுகள் தொடர்பான இந்த செயல்கள் கண்டிக்கத்தக்கது’.
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கும், சபரிமலையின் புனிதம் காக்கப்பட வேண்டும் என்று போராடுபவர்களுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் 10 முதல் 50 வயதுடைய பெண்களை அனுமதிக்கலாமா வேண்டாமா என்பது தானே தவிர,
ஐயப்ப பக்தர்களாக இல்லாதவர்களையும், நக்சல்களையும் கோவிலுக்குள் அழைத்து செல்ல வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளதா? என கேள்வி எழுப்பினார்.
இதன் மூலம் கேரள அரசை எச்.ராஜா குற்றம் சாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சபரிமலையில் பெண்களை அனுமதித்ததை கண்டித்து, நேற்று கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சபரிமலையில் நக்சல்கள் உள்ளே விடுவதாக கேரள அரசு மீது எச்.ராஜா குற்றம் சாடியுள்ளார்.