தனது சமூக வலைத்தளம் பக்கத்தில் தனிமையில் மழையை ரசித்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார் கீர்த்தி சுரேஷ்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக ஜொலித்துக் கொண்டிருக்கும் நடிகை தான் கீர்த்தி சுரேஷ். தமிழில் “இது என்ன மாயம்” என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் சிவகார்த்திகேயனின் “ரஜினி முருகன்” படத்தில் தான் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து தொடரி, சாமி 2, சர்க்கார் என பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து நடிக்க ஆரம்பித்தார்.

அதன்பின் தெலுங்கு சினிமாவில் அதிக கவனத்தை செலுத்தி வந்த இவர் தமிழ் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். தற்போது உடல் எடையை குறைத்துக் கொண்டு மிகவும் ஒல்லியான தோற்றத்தில் இருக்கு கீர்த்தி சுரேஷிற்கு தற்போது அதிக பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது தமிழ் தெலுங்கு என்று பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷின் நடிப்பில் அண்மையில் வெளியான படம் தான் “சாணி காயிதம்”.

இப்படம் OTT தளத்தில் வெளியானது. இதில் தனது ஆக்ரோஷமான நடிப்பினை தத்ரூபமாக காண்பித்திருக்கும் கீர்த்தி சுரேஷை பலரும் வெகுவாக பாராட்டி வந்தனர். அதன் பின் தெலுங்கில் “சர்க்காரூ வாரி பாட்டா”, மலையாளத்தில் “வஷி” என இரு திரைப்படங்களும் இவரது நடிப்பில் அண்மையில் வெளியாகி இருந்தது ஆனால் இரண்டுமே தோல்வியை தழுவியுள்ளது.

தற்போது மீண்டும் தமிழில் மாறி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் “மாமன்னன்” திரைப்படத்தில் உதயநிதியுடன் இணைந்து பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் . அதாவது மழையில் கோடை பிடித்துக்கொண்டு தனிமையில் இருக்கும் அழகிய புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார்.