அனைவரும் எதிர்பார்த்த எழில்,கயல் திருமணம்.. சைத்ரா ரெட்டி போட்ட பதிவு..!
கயல் சீரியல் குறித்து லேட்டஸ்ட் பதிவை வெளியிட்டுள்ள சைத்ரா ரெட்டி.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று கயல். இந்த சீரியலில் கயல் மற்றும் எழிலின் திருமணம் வைபவம் நடந்து கொண்டு வருகிறது.
பல தடைகளைத் தாண்டி கயல், எழில் திருமணம் எப்படி நடக்கப் போகிறது என்று இரண்டு வாரங்களாக பரபரப்பாக கதைகளம் நகர்ந்து வருகிறது. தற்போது இது குறித்து நாயகியான சைத்ரா பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அதில், நீங்கள் அனைவரும் எதிர்பார்த்த கயல், எழில் திருமணம் நடந்து விட்டது. உங்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி. இது மட்டுமில்லாமல் அனைவரும் கயல் முடிந்து விடுகிறதா என்ற கேள்வியை கேட்டு வருகின்றனர் .ஆனால் கயல் சீரியல் முடியவில்லை இன்னும் பல சுவாரசியமும் பல திருப்பங்களுடன் சீரியல் எபிசோட் இருக்கும் என தெரிவித்துள்ளார். தொடர்ந்து கயல் சீரியலைப் பாருங்கள் என்று பதிவிட்டுள்ளார் இவரின் இந்த பதிவை இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தொடர்ந்து இரண்டு வாரங்களாக கயல் சீரியல் டிஆர்பி யில் முதலிடத்தை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram