காந்தாரா 2 திரைப்படம் குறித்த முக்கிய அப்டேட் வைரலாகி வருகிறது.

கன்னட திரை உலகில் பிரபல முன்னணி நடிகர் மற்றும் இயக்குனராக வலம் வருபவர் ரிஷப் ஷெட்டி. இவரது இயக்கம் மற்றும் நடிப்பில் உருவான காந்தாரா திரைப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது. சிறிய பட்ஜெட்டில் உருவாகி இருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வசூலை குவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடிக்க செய்திருந்தது.

முதலில் கன்னட திரைப்படமாக வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பால் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலுமே டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி வசூலை அள்ளியது. கர்நாடகத்தில் வாழும் பழங்குடி மக்களின் சமய வழிபாட்டை மையமாக வைத்து உருவாகியிருந்த இப்படத்தை திரை பிரபலங்கள் பலரும் பாராட்டி வந்த நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாகத்தை உருவாக்க படக்குழு திட்டமிட்டு இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகியிருந்தது.

அதன்படி இப்படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளை இயக்குனரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி விரைவில் முடிக்க இருப்பதாகவும், படப்பிடிப்பு பணிகளை வரும் ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி தொடங்க உள்ளதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் பான் இந்தியா திரைப்படமாக உருவாக இருக்கும் இப்படத்தின் முக்கிய விபரங்களை நடிகர் ரிஷப் ஷெட்டி பகிர்ந்திருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர், காந்தாரா 2 திரைப்படத்திற்கான ஃப்ரீ ப்ரோடுக்ஷன் பணிகள் மற்றும் நடிகர்களுக்கான தேர்வு நடைபெற்று வருவதாக கூறியிருக்கிறார். மேலும் விரைவில் இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகளை நிறைவு செய்து அடுத்த ஆண்டே வெளியிட போவதாகவும் தெரிவித்துள்ள அவர் இது குறித்து தயாரிப்பு நிறுவனம் விரைவில் அதிகருவப்பூர்வமாக அறிவிக்கும் என்றும் கூறியிருக்கிறார். இவரது இந்த தகவல் ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.