இப்படி எமனுக்கு பலி கொடுத்துட்டோமே என தன்னுடைய அக்கா மகளின் இறப்பு குறித்து பதிவு செய்துள்ளார் மீனா.

தமிழ் சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் பிரபல நடிகையாக வலம் வருபவர் கம்பம் மீனா. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆகிய சீரியலில் நடித்து வரும் இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சீதாராமன் தொடரில் நடித்து வருகிறார்.

தன்னுடைய வட்டார மொழி பேச்சால் ரசிகர்களை கவர்ந்த கம்பம் மீனா தன்னுடைய அக்கா மகன் பாண்டியின் இறப்பு குறித்து கண்ணீருடன் பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அந்த பதிவில் நீதாண்டா காரியக்காரன். தீஷிதனுக்கு 5 வயசு ஆகட்டும். அவனை எப்படி கொண்டு வர பாரு சித்தின்னு சொல்லி நான்கு நாள் தாண்டா ஆகுது. நீ அடுத்த தடவை வரும்போது நான் எப்படி இருக்கிறேன் பாரு சித்தின்னு சொன்னியே. நாலே நாளிலேயே என்னையே வரவுச்சிட்டியே பாண்டி. ஐயோ என்னடா இது காலக்கொடுமை. இப்படி 34 வயசிலேயே எமனுக்கு பலி கொடுத்துட்டோமேடா பாண்டி. நான் வந்துட்டு இருக்கேன் டா. வாசல்ல வந்து என்னைய வா சித்தின்னு சொல்லுவியா பாண்டி, எழுந்து வந்து கூப்பிடுடா என்று மன வேதனையில் கூறி இருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் கம்பம் மீனாவிற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.