கமல் தனிமைப்படுத்தப்பட்டதாக மாநகராட்சி ஒட்டிய நோட்டீசால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
KamalHaasan Clarification on Corona Issue : உலகநாயகன் கமல்ஹாசனின் வீட்டின் வெளியே இது தனிமைப்படுத்தப்பட்ட வீடு என மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் ஒட்டியது.
இதனால் கமல்ஹாசன் கொரானா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் வைரலாகி அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தின.
ஆனால் இது குறித்து கமல்ஹாசன் கூறியுள்ளதாவது அந்த வீட்டில் நான் தற்போது வசிக்கவில்லை. தற்போது அந்த வீடு மக்கள் நீதி மையம் கட்சியின் அலுவலகமாக செயல்பட்டு வருகிறது.
மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் நான் முன்னெச்சரிக்கைக்காக என்னையே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். நீங்களும் அவ்வாறே செய்ய வேண்டுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து மாநகராட்சி நிர்வாகம் தான் ஒட்டிய நோட்டீஸ் செய்யும் அகற்றியுள்ளது.