Kamal Haasan Speech
Kamal Haasan Speech

Kamal Haasan Speech – சென்னை: நேற்றைய தினம் திருநெல்வேலியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தமிழகத்தில் இருக்கும் அனைத்து முக்கிய கட்சிகள் மீதும் கடுமையாக விமர்சனம் செய்தார்.

நேற்றைய தினம் மநீம கட்சி சார்பாக திருநெல்வேலியில் மக்கள் நீதி மய்யம் தொடங்கி 1 வருடம் ஆனதை கொண்டாடும் வகையில் மிகப்பெரிய பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் பேசிய கமல்ஹாசன் அனைத்து கட்சிகளையும் சரமாரியாக விமர்சனம் செய்தார்.

அதில் அதிமுகவை பற்றி விமர்சனம் செய்த கமல்ஹாசன் ”தூத்துக்குடியில் கேள்வி கேட்டதற்காக நம் வாயில் சுட்டார்கள் மறக்க வேண்டாம். இந்த அரசு கொள்ளையடிக்கிறது.

இதனால் இவர்களுக்கு விரைவில் பதிலடி கொடுத்தே ஆக வேண்டும்” என்று மிக கடுமையான விமர்சனங்களை அதிமுக மீது வைத்து இருந்தார்.,

அதே போன்று, திமுக கூட்டணியில் சேருவது குறித்து மறைமுகமாக விமர்சனம் செய்த கமல், ‘நான் யாருடனும் கூட்டணி வைக்க விரும்பவில்லை.

நான் யாரிடமும் சீட் கேட்டு நிற்கவில்லை என்றும், தனியாக இறங்கி அடிக்க போறவனுக்கு எதற்கு சீட் , நான் இறங்கி அடிப்பேன் ‘ என்றும் திமுகவை மறைமுகமாக கிண்டல் செய்து இருந்தார்.

பாஜக குறித்து பேசுகையில், என்னை பார்த்து “பாஜகவின் பீ டீம்” என்று கெட்டவார்த்தை பேசுகிறார்கள்.

இது போன்ற கெட்டவார்த்தைகளை பேச வேண்டாம்.. அப்படி நீங்கள் பேசினால் எனக்கு கடும் கோபம் வரும்.

நான் யாருடைய பீ டீமும் இல்லை, நான் மக்களின் டீம் (?!) என்று பாஜகவை குறித்தும் கடுமையாக விமர்சனம் செய்தார்.