எஸ்பிபி அவர்களை நேரில் சந்தித்த உலகநாயகன் கமல்ஹாசன் அவரது உடல்நிலை குறித்துப் பேசியுள்ளார்.
Kamal about SPB Health : இந்திய சினிமாவில் பிரபல பின்னணிப் பாடகராக வலம் வருபவர் எஸ் பி பாலசுப்பிரமணியம். இவர் கடந்த ஒரு மாத காலமாக கொரானா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இவர் கொரானா தொற்றில் இருந்து மீண்டு இருந்தார். மேலும் அவரது உடல்நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று திடீரென எஸ்பிபி அவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதனை அவரது மகன் சரண் அவர்களும் உறுதி செய்திருந்தார்.
இதனால் திரையுலக பிரபலங்கள் பலரும் எஸ்பிபி விரைவில் குணமடைய வேண்டுமென மீண்டும் பிரார்த்தனை செய்யத் தொடங்கினர்.
உலகநாயகன் கமல்ஹாசன் நேரடியாக மருத்துவமனைக்குச் சென்று எஸ்பிபியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் உயிர் காக்கும் மருத்துவக் கருவிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவர் நலமுடன் இருக்கிறார் எனக் கூற முடியாது. அபாய கட்டத்தில் தான் இருக்கிறார் என தெரிவித்துள்ளார்.
இதனால் எஸ்பிபி ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். விரைவில் அவர் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என இறைவனை பிரார்த்தனை செய்து வருகின்றனர்.