70 வயதை கடந்த நடிகருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் நடிகை ஜோதிகா.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஜோதிகா. தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழி படங்களில் நடித்து வந்த இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்துக்குப் பிறகு படங்களில் நடிக்காமல் இருந்து வந்த இவர் பல வருட இடைவெளிக்குப் பிறகு கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு ராட்சசி உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் கடைசியாக கார்த்தியுடன் இணைந்து உடன்பிறப்பே என்ற படத்தில் நடித்தார்.
இந்த நிலையில் இவர் அடுத்ததாக மலையாளத் திரையுலகில் 70 வயதாகும் நடிகருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆமாம் நடிகர் மோகன்லாலுக்கு ஜோடியாக ஜோ பேபி என்ற இயக்குனர் இயக்கும் படத்தில் நடிக்கப் போவதாக சொல்லப்படுகிறது.
இந்த தகவல் இணையத்தில் வைரலாக ஏன் இப்படி ஒரு முடிவு என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.