64 வயதில் நடிகை ஜெயசுதா மூன்றாவது திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ஜெயசுதா. இவர் வம்சி இயக்கத்தில் கார்த்திக்கு அம்மாவாக தோழா படத்தில் நடித்து இருந்தார்.
இதனைத் தொடர்ந்து தற்போது தளபதி விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்துள்ளார். தற்போது 64 வயதாகும் இவருக்கு இரண்டு திருமணங்கள் நடந்து விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருகிறார்.
இப்படியான நிலையில் தற்போது இவர் வெளிநாட்டை சேர்ந்த ஒருவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டதாக தகவல் பரவி வந்தது. மேலும் இவர் வாரிசு இசை வெளியீட்டு விழாவில் வெளிநாட்டு நபருடன் பங்கேற்றதும் இந்த பேச்சுக்கு காரணமாக அமைந்தது.
இப்படியான நிலையில் இது குறித்து ஜெயசுதா விளக்கம் அளித்துள்ளார். தனது வாழ்க்கை வரலாற்றை அவர் படமாக்க உள்ளதால் தன்னுடன் பயணித்து வருவதாக தெரிவித்துள்ளார்.