ஜவான் படத்தின் வெற்றிக்காக ஷாருக்கானுடன் திருப்பதி சென்றுள்ளார் நடிகை நயன்தாரா.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் அட்லி. இவரது இயக்கத்தின் தற்போது ஜவான் என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. ஷாருக்கான் நயன்தாரா பிரியாமணி யோகி பாபு விஜய் சேதுபதி உட்பட எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

படத்தின் பிரீ ரிலீஸ் ஈவென்ட் சென்னையில் நடைபெற்றது. ஆனால் இந்த நிகழ்ச்சியில் நயன்தாரா கலந்து கொள்ளவில்லை. இப்படியான நிலையில் ஷாருக்கான், நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் குடும்பத்துடன் திருப்பதி சென்று ஜவான் பட வெற்றிக்காக பிரார்த்தனை செய்துள்ளனர்.

இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.