ஜெயிலர் பரத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் எண்ணம் இருப்பதாக நெல்சன் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் திலீப் குமார். இந்த படத்தை தொடர்ந்து இவர் சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்ற படத்தில் தளபதி விஜய் வைத்து பீஸ்ட் என்ற படத்தையும் இயக்கினார்.

டாக்டர் திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நிலையில் பீஸ்ட் திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தது. இதையெல்லாம் கடந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கிய ஜெயிலர் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் நெல்சன் திலீப் குமார் அளித்த பேட்டி ஒன்றில் ஜெயிலர் 2 படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு அவர் தனக்கு ஜெயில்ல படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கம் எண்ணம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அது மட்டுமில்லாமல் கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய படங்களின் இரண்டாம் பாகத்தை இயக்கும் எண்ணமும் இருப்பதாக கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.