சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படத்தை இயக்கிய பிரபலமான இயக்குனர் நடிகர் ரஜினிக்கு கதை கூறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கோலிவுட் திரை உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி, சிவராஜ் குமார் ஆகியோர் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினி லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் லால் சலாம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

அதன் பிறகு நடிகர் ரஜினியின் அடுத்த அடுத்த படங்களை இயக்க பல முன்னணி இயக்குனர்கள் நடிகர் ரஜினிக்கு கதை கூறி வருவதாக தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாகி வரும் நிலையில் தற்போது சூர்யாவின் நடிப்பில் ஜெய் பீம் என்னும் வெற்றி திரைப்படத்தை கொடுத்த இயக்குனர் ஞானவேலும் நடிகர் ரஜினிக்கு கதை கூறி இருப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. ஜெய் பீம் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு ஞானவேலு இயக்கி வரும் படத்தில் சூர்யா நடித்துவரும் நிலையில், ரஜினியிடம் ஞானவேலு கதை கூறியிருக்கும் தகவல் திரை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.