சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தை ரிலீஸ் செய்ய விடமாட்டோம் என பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Issue on ET Release in Cuddalore : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான ஜெய் பீம் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தாலும் வன்னியர்களை தவறாக சித்தரிப்பதாக சர்ச்சையில் சிக்கியது.

சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என அக்கட்சியினர் கூறிவந்த நிலையில் சூர்யா மன்னிப்பு கேட்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில் மார்ச் 10ஆம் தேதி எதற்கும் துணிந்தவன் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில் ஜெய்பீம் சர்ச்சையை காரணம் காட்டி சூர்யா மன்னிப்பு கேட்காமல் இந்த படத்தை கடலூர் மாவட்டத்தில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என பாமக மாணவரணி சங்கச் செயலாளர் விஜயவர்மன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாவதில் திடீர் சிக்கல் உருவாகியுள்ளது. இது சூர்யா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.