
தி நகர் துணி கடையில் வேலைக்கு சேர்ந்துள்ளார் இலக்கியா சீரியல் நடிகை.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான கண்ணான கண்ணே என்ற சீரியலில் மேனகா என்ற கதாபாத்திரத்தில் அழகு வில்லியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் பிரியா.

கண்ணான கண்ணே சீரியல் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து தற்போது சன் டிவியில் மதிய வேளையில் ஒளிபரப்பாகி வரும் இலக்கியா சீரியலில் வில்லியாக மிரட்டலான நடிப்பை கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது இவர் சென்னை தி நகரில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஆடி தள்ளுபடியில் ஷாப்பிங் செய்துள்ளார். 500 ரூபாயில் ஒரு புடவை வாங்கினால் ஒரு புடவை ஃப்ரீ, ஆயிரம் ரூபாய்க்கு மூணு புடவை என அசத்தலான்னு தள்ளுபடி விற்பனையை கேட்டு வியந்து போய் உள்ளார்.

அதிலும் எக்கச்சக்கமான கலெக்சன்ஸ் இருப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளார். இலக்கியா சீரியலுக்காக நிறைய புடவைகளை ஷாப்பிங் செய்துள்ளார். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண் பெண் என இருவருக்கும் குறைந்த விலையில் அதுவும் தள்ளுபடி விற்பனையில் தரமான ஆடைகள் கிடைப்பதாக பிரியா தெரிவித்துள்ளார். மேலும் அவர் இந்த கடையில் சேல்ஸ் கேர்ளாக மாறி கடைக்கு வந்த கஸ்டமர்களையும் கவனித்துள்ளார்.

இது குறித்த ஷாப்பிங் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
