என் மனைவிக்கு எப்போதும் நன்றி கடன்பட்டிருப்பேன் : சிவகார்த்திகேயன் பேச்சு..!

மனைவி குறித்து பேசி உள்ளார் சிவகார்த்திகேயன்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.ஏ.ஆர் முருகதாஸ் இயக்கியுள்ள இந்த படத்தில் ருக்மணி வசந்த்,வித்யூத் ஜாம்வல், விக்ராந்த், பிஜு மேனன், சபீர் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன் மனைவி குறித்து பேசியுள்ளார்.
அதாவது நான் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே ஆர்த்தி என்னை திருமணம் செய்து கொண்டார் சினிமா திறமையானவர்களுக்கு எப்போதும் ஒரு அங்கீகாரம் கொடுக்கும் ஆனால் எனக்கு நல்ல சம்பளம் கூட அந்த நேரத்தில் இல்லை என் மீது நம்பிக்கை வைத்து என்னை திருமணம் செய்து கொண்டதற்காக நான் அவரை எப்போதும் அவருக்கு நன்றி கடன்பட்டிருப்பேன் எனக் கூறியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
