சூர்யா, கார்த்தியை தொடர்ந்து சென்னை வெள்ள நிவாரண நிதிக்கு நிதி உதவி அளித்துள்ளார் ஹரிஷ் கல்யாண்.
சென்னையில் பெய்த கனமழை காரணமாக மாநகரம் முழுவதும் தண்ணீரில் தத்தளித்து வருகிறது. பலர் உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர்.
முதல் ஆளாக நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி என இருவரும் இணைந்து 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக அளித்தனர். இதனைத் தொடர்ந்து நடிகர் ஹரிஷ் கல்யாண் ஒரு லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக அழைத்துள்ளார்.
பெரிய நடிகர்கள் கூட இதுவரை நிதி உதவி அளிக்க முன்வராத நிலையில் ஹரிஷ் கல்யாண் உதவி இருப்பது பலரது மத்தியில் பாராட்டுக்களை பெற்று வருகிறது.