Happy Birthday Kalaignar :
கலைஞரின் 96-வது பிறந்தநாளையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் அரசியல் பிரமுகர்கள், எழுத்தாளர்கள், திரைப்படத்துறையினர் மற்றும் பலர் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
கலைஞரின் 96-வது பிறந்தநாளையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் காலை முதல் பலர் கலைஞர் நினைவிடத்தில் மலர்தூவி வணங்கி வருகின்றனர்.
இந்நிலையில் கலைஞர் நினைவிடத்தில் மலர்தூவி வணங்கிய வைரமுத்து பேசுகையில், “போராட்டத்தால் சாதித்து காட்டியவர் கலைஞர், கள்ளக்குடியில் தமிழை காப்பதற்கு, தண்டவாளத்தில் படுத்து போராட்டம், பாளையங்கோட்டை சிறையில் போராட்டம்.,
பிறகு ஆட்சிக்கு வந்ததும் போராட்டம்., ஆட்சி கலைக்கப்பட்டதும் போராட்டம், பிறகு கட்சிகள் பிளவுற்றதும் போராட்டம்., அவ்வளவு ஏன், அவர் வாழ்வெல்லாம் போராட்டம்! என்று சொல்வதை விட வாழ்ந்து மறைந்து பிறகும் போராட்டம் என்று தான் சொல்ல வேண்டும்” இவ்வாறு பேசினார்.
அதை தொடர்ந்து பேசிய வைரமுத்து, இதோ வங்கக்கடலில் துயில் கொண்டிருக்கிறாரே கலைஞர். ‘இந்த இடம் கூட அவர் மரணத்திற்கு பிறகு தளபதியின் போராட்டத்திற்கு பிறகு கிடைத்தது என்பது தான் உண்மை.
எனவே போராட்டமே வாழ்வு..வாழ்வே போராட்டம்.. என்ற கொள்கையில் இருந்து இளைஞர்கள் பின் வாங்கக்கூடாது’ என்பதை கலைஞரின் வாழ்வு தமிழனுக்கு அழுத்தி சொல்கிறது என்று கூறினார்.
மேலும் கலைஞரின் பிறந்தநாளான இன்று, தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் திமுகவினர் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
உணர்வு ரீதியாக கலைஞர் எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பதாக கவிஞர் வைரமுத்து நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.