கோபி வெளியிட்ட புகைப்படத்தால் பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வருவதாக ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சதீஷ்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னால் கோபி இந்த சீரியலில் இருந்து விலகப் போவதாக அறிவித்தார். இன்னும் பத்து பதினைந்து எபிசோடுகள் மட்டுமே வருவேன் என கூறியிருந்த நிலையில் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு தொடர்ந்து நடிக்க போவதாக அறிவித்துள்ளார் சதீஷ்.

மேலும் அவர் இந்த சீரியல் குறித்து தனது சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து எதையாவது கூறி வருகிறார்.

அந்த வகையில் வயதான கட்டத்தில் இருக்கும் போட்டோவை வெளியிட்டு பாக்கியலட்சுமி சீசன் 2 லுக் என தெரிவித்துள்ளார். இதனால் பாக்கியம் அமைக்கும் சீரியல் முடிவுக்கு வருகிறதா என ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

அதற்கு ஏற்றார் போல சமீபத்தில் வெளியான ப்ரோமோவில் பாக்கியா ஜெனியை காப்பாற்றிய ராதிகாவுக்கு நன்றி சொல்லி நீங்க எல்லாத்தையும் இழந்துட்டு நிக்கிற மாதிரி இருக்கு என பேச ராதிகாவும் பாக்யாவை பாவமாக பார்க்கிறார். இதனால் இருவரும் ஒன்று சேர்ந்து கோபியை விலக்கி வைத்துள்ளார்கள், இதன் மூலம் சீரியல் முடிவுக்கு வந்துவிடும் எனவும் ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.