பிரதமர் ஏன் தமிழில் பேசவில்லை என பதிவிட்ட குஷ்பூவை ஜோக்கர் என கிண்டலடித்துள்ளார் பிக் பாஸ் நடிகை.
Gayathri Raguram Blast Kushboo : கரோனா வைரஸ் தாக்குதலின் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை மூன்று முறை இந்த ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மே 17 ஆம் தேதியுடன் இந்த ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வர உள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி சில தினங்களுக்கு முன்பு மக்களுடன் உரையாடினார்.
வழக்கம்போல் நரேந்திர மோடி இந்தியில் பேசினார். இது குறித்து குஷ்பு நரேந்திர மோடி என்ன மொழியில் பேசினார்?? ஏன் தமிழில் பேசவில்லை. இவ்வளவு பெரிய சோசியல் மீடியா பிளாட்பார்மான ட்விட்டரில் தமிழில் தான் பேசவேண்டும் என சில கோமாளிகள் என்னை கூறுகின்றனர். அப்போ மோடி ஜி மட்டும் ஏன் பேசவில்லை என கூறினார்.
குஷ்புவின் இந்த பதிவுக்கு பாஜகவை சேர்ந்த பிக்பாஸ் பிரபலமான காயத்ரி ராகுராம் பதிலடி கொடுத்துள்ளார்.
ஜோக்கர், நீங்க பேசுறது தமிழல்ல தங்லிஷ் என கூறியுள்ளார். மேலும் பிரதமர் தமிழ்நாட்டுக்காக பேசவில்லை இந்தியாவுக்காக பேசினார் எனவும் கூறியுள்ளார்.
https://twitter.com/gayathriraguram/status/1260430906038386690?s=19