எனக்கு இது போதும் என பிரியா அட்லி புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.
Priya Atlee in Quarantine Time : தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. அதன் பின்னர் தளபதி விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து மூன்று படங்களை இயக்கினார்.
இவர் சின்னத்திரை நடிகையான பிரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் அடிக்கடி ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு தங்களது காதலை அனைவருக்கும் தெரியப் படுத்தி வருகின்றனர்.
அதேபோல் பிரியா வெளியிடும் சில புகைப்படங்கள் சில சமயங்களில் சர்ச்சையாக மாறி விடுவதும் உண்டு.
தற்போது பிரியா அட்லீ, நாய் குட்டியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு எனக்கு இது போதும் என பதிவிட்டுள்ளார்.
இது போதும் என்றால் அப்படி வேண்டாமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.