ஒளிப்பதிவு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சூர்யா மற்றும் பல நடிகர்களை பங்கமாக கலாய்த்து உள்ளார் பிரபல நடிகை காயத்ரி ரகுராம்.
Gayathri Raghuram Blast Suriya : திரையுலகில் வெளியாகும் படங்களை கண்காணிக்கும் வகையில் ஒளிப்பதிவு சட்டம் என்ற பெயரில் புதிய விதியை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதன்படி ஒரு திரைப்படம் சென்சார் செய்யப்பட்டாலும் அதில் உள்ள காட்சிகளை அரசு நீக்குவதற்கும் அந்த படத்தை முழுமையாக தடை செய்வதற்கும் வாய்ப்புள்ள வகையில் இந்த சட்ட திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
கிரிக்கெட் ஆடுகையில் 2 வீராங்கனைகள் மயக்கம் : மற்றவர்கள் அதிர்ச்சி..பரபரப்பு..
இதனால் படங்களில் கருத்து சுதந்திரம் என்பது இருக்காது என பலரும் இந்த சட்டதிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நடிகர் சூர்யா இதனை மிகவும் வன்மையாக கண்டித்து இருந்தார்.
இந்த நிலையில் நடிகை காயத்ரி ரகுராம் சூர்யா மட்டும் பல நடிகர்களை மோசமாக கலாய்த்து பதிவு செய்துள்ளார். எப்படியும் இந்த நாட்களில் எந்த திரைப்படத்திலும் கருத்து இல்லை .. உங்கள் படங்களில் 4 சண்டைக் காட்சிகளும் 4 பாடல்களும் 4 சென்டிமென்ட் காட்சிகளும் 2 mass opening காட்சிகளும், ரவுடிகள் மட்டும் ஹீரோக்கள். வேறு எதுவும் இல்லை. இதில் உங்களுக்கு இன்னும் என்ன கருத்து சுதந்திரம் வேண்டும்? என பதிவு செய்துள்ளார்.
இவருடைய இந்த பதிவு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐயா மூஞ்ச பார்த்து Mid Night Masala பார்பாருனு நினைச்சிட்ட – தாத்தாவுடன் பாலா செய்த கலாட்டா..!!